இரயில் சிநேகம்
திரு. மோடி அவர்கள்
பிரதமரான பிறகு, முதன் முதலாக அவரது தலைமையில் இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா.
- பட்ஜெட்டின் சிறப்பு
அம்சமாக, தமிழகத்திற்கு ஐந்து புதிய இரயில்களும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டையும்
இணையதளம் மூலம் பெறுவதற்கும், அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதும், தனியார் துறையை பயன்படுத்தி
இந்தியன் இரயில்வேயை நவீனமாக்குதலும் மற்றும் சுமார் அறுபது ஆண்டுகள் விடுதலை வரலாற்றில்
முதல் முறையாக புல்லட் இரயிலை அறிமுகப்படுத்துதல் என்றும் பலவகையான பல்நோக்கு திட்டங்களோடு
இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இரயில்வே
அமைச்சர் சதானந்தா கவுடா.
- மத்திய இரயில்வே
அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்த இரயில்வே பட்ஜெட்டை பற்றி திரு.மோடி அவர்கள்
தெரிவித்த கருத்துக்கள், எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்
பட்ஜெட் இது என்றும், மேலும் இது சாதாரண மனிதர்களுக்கான பட்ஜெட் என்றும், இது சிறப்பான
சேவை, வேகம், பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான ஆவலைப் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இரயில்வே
இலாகாவை நவீனப்படுத்தும் முயற்சிக்கான பங்களிப்பை தருவதுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு
உதவுவதாகவும் உள்ளது.
- இரயில்வே பட்ஜெட்
இந்தியாவை வளர்ச்சி பயணத்தில் இரயில்வே துறைக்கு முக்கிய பங்கு இருப்பதை காட்டுவதாக
அமைந்து இருக்கிறது. மேலும் இது நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
நாம் இரயில்வே இலாகாவை எங்கே எடுத்து செல்ல விரும்புகிறோம் என்பதையும் இரயில்வே இலாகவின்
வாயிலாக இந்தியாவை எங்கே கொண்டு செல்ல விரும்புகிறோம் என்பதையும் ஒரு சேர வெளிப்படுத்துவதாக
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா என்று
கூறினார்.
- மேலும் இந்த பட்ஜெட்டிற்கு
சமமான முறையில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது.
இன்னும் தொடரும்…….